அரிதார அடுக்குகளால்
ஆகி போனதென் முகம்
நீங்கள் நினைத்திருக்கிறபடி
நானில்லை என்பது
எனக்கு மட்டுமே தெரியும்
நான் நானாயிருக்கிற சந்தர்பங்கள்
எப்போதாவதுதான் வாய்க்கிறதெனக்கு
மதிப்பிடுகள் அனைத்தும்
மாறிப்போகிற கால ஓட்டத்தில்
நீங்கள் நினைத்திருக்கிறபடியே
நாளை நான் மாறிப்போகலாம்
யாரும் அறியாதபடி.
- விவேகா
- விவேகா
